சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம், நவம்பர் 26 அன்று வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஒருவருக்கு முன்ஜாமீன் அளித்து தீர்ப்பு அளித்திருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்திட வேண்டும் என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கோரியுள்ளது.